10 நவம்பர் 2013

நாடுகடந்த தமிழீழ அரசு வெளியிட்டுள்ள கையேடு!

பொதுநலவாயத்தின் அடிப்படைக் கோட்பாடும் , நிலைப்பாடும் சிறிலங்காவில் இடம்பெறவுள்ள
பொதுநலவாய மாநாட்டினால் கேள்விக்கும் விவாதத்திற்கும் உள்ளாகியுள்ள நிலையில் , சிறிலங்காவினை பொதுநலவாயத்தில் இருந்து நீக்குவதற்கான அடிப்படை முன்னுதாரணங்களோடு கையேடு ஒன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்டுள்ளது .
மின்னிதழ் வடிவில் அனைத்துலக பரப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்தக் கையேடானது கீழவரும் விடயங்களை முன்வைக்கின்றது :

1 ) . பொதுநலவாயத்தின் அடிப்படை கோட்பாடுகளை எப்படி சிறிலங்கா அரசு பலவழிகளில் தட்டிக்கழித்தும் , ஏற்க மறுத்து முரணியும் , மீறியும் நடந்து கொள்கிறது .

2 ) . பொதுநலவாய மந்திரிகளது செயற்குழுவின் நடைமுறைகளை நைஜீரியா , சிம்பாவே , பாகிஸ்தான் , பிஜி என்பவை தொடர்பாக மீளாராய்வதால் , சிறிலங்காவை பொதுநலவாயத்திலிருந்து நீக்கிவைக்க தேவையான தெளிவான முன்னுதாரணம் இங்கே ஏற்படுத்தப்பட்டிருப்பதை இந்தக் கையேடு அடையாளம் காண்கிறது .

3 ) . மனிதஉரிமைகள் , சனநாயகம் , நீதி , ஊடகத்துறை போன்றவற்றின் உரிமை மீறல்களை விசாரிக்க வேண்டிய பொதுநலவாய மந்திரிகள் செயற்குழு அமைப்பே தனது தலைமையை எடுத்து நடத்த சிறிலங்காவுக்கு இடமளிப்பதால் போர்க்குற்றம் , இனவழிப்பு , மானுடத்துக்கெதிரான குற்றங்கள் புரிந்த சிறிலங்காவின் செயல்களை அது நிபந்தனை இல்லாமல் ஏற்றுக்கொண்டதாகிறது .

4 ) . சிறிலங்காவின் அரசியல் அமைப்பின் 6 ம் திருத்தத்தில் தெட்டத்தெளிவாக காணப்படுவது போலவே வலிந்த தனமாக பேச்சு சுதந்திரத்தை முடக்கும் சிறிலங்கா அரசின் நிலைப்பாடானது பொதுநலவாயத்தின் அடிப்படை தகமைகளை தகர்ப்பதாகிறது .
http://www.joomag.com/magazine/chogm-2013-booklet-by-tgte/0752755001383842662
எனும் இணைய முகவரியூடாக இக்கையேட்டினை மின்னிதழில் வடிவில் காணவும் , பதிவிறக்கம் செய்யவும் முடியும் எனத் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் , புத்தக வடிவில் இக்கையேடு பல் நாடுகளில் வரும் நாட்களில் வெளியிடப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக