09 நவம்பர் 2013

மறைந்தும் மறையாத மாமனிதர் ரவிராஜ்!

பிரபல சட்டத்தரணியாகவும்,தமிழ்,சிங்களம்,ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவராகவும் திகழ்ந்தவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ரவிராஜ் அவர்கள்.தமிழ் தேசியத்திற்காகவும் மனித உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்து வந்ததால் மாமனிதர் ரவிராஜை கொழும்பில் வைத்து படுகொலை செய்தது சிங்களப் பேரினவாதம்.09.11.2006ல் தமிழர் மனமெங்கும் பேரிடியாய் அமைந்தது இந்த செய்தி!இன்றுடன் ஏழு ஆண்டுகள் ஆகின்றபோதும் இன்றுபோல் இருக்கின்றது அந்த நினைவுகள்.ரவிராஜ் அவர்களின் அர்ப்பணிப்பை கருத்திற் கொண்டு தமிழீழ தேசியத்தலைவர் அவரை மாமனிதராக கெளரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக