01 ஜனவரி 2015

குமார் குணரத்தினம் மீண்டும் சிறீலங்கா வந்தார்!

முன்னிலை சோசலிச கட்சியின் தலைவர் குமார் குணரட்னம் இலங்கை வந்துள்ளார்.
நாடு கடத்தப்பட்டிருந்த குமார் குணரட்னத்திற்கான அபராத பணம், குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு செலுத்தப்பட்ட நிலையிலேயே அவர் இலங்கை வர அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று நள்ளிரவு 12.15 அளவில் அவர் நாடு திரும்பியதாக முன்னிலை சோசலிச கட்சியின் பிரசார செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார்.முன்னாள் ஜேவிபி உறுப்பினரான இவர் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக