20 மார்ச் 2011

மட்டக்களப்பில் நிலம் வெடித்துள்ளது!

மட்டக்களப்பு நகரில் திடீரென நிலம் வெடித்துள்ளதாக மக்கள் அறிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு ரயில் நிலையத்திற்கு அருகாமையில் இவ்வாற நிலம் வெடித்துள்ளதாகவும், இந்த வெடிப்புக்களிலிருந்து நீர் வெளியேறி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நிலகீழ் நீர் இவ்வாறு வெளியேறி வருவதாக அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் ஊகம் வெளியிட்டுள்ளது.
பௌர்ணமி தினத்தினால் இவ்வாறு நிலக்கீழ் நீர் வெளியேறியிருக்கலாம் என அனர்த்த முகாமைத்துவ நிறுவன அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
அனர்த்த முகாமைத்துவ நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குறித்த பிரதேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும் பாரியளவில் எவ்வித ஆபத்துக்களும் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக