31 மார்ச் 2011

ஸ்ரீலங்கா கடற்படையினர் நால்வர் காணாமற்போயுள்ளனர்!

வட பிராந்தியக் கடலில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த கடற்படை வீரர்கள் அணியொன்று காணாமற் போயிருப்பதாக அறியக் கிடைத்துள்ளது.கடற்படை வீரர்கள் நால்வரைக் கொண்ட அணியொன்றே காணாமற் போயிருப்பதுடன், அவர்கள் பயன்படுத்திய வள்ளம் கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கை காரணமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவின் சாலை கடற்படை முகாமிலிருந்து சுண்டிக்குளம் முகாம் வரை பொருட்கள் எடுத்துச் சென்று கொண்டிருந்த நிலையிலேயே அவர்கள் காணாமற் போயுள்ளனர். அவர்கள் பயணித்த படகு எதுவித சேதமுமின்றி கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து பிரஸ்தாப வீரர்கள் யாரேனும் மர்ம நபர்களால் கடத்தப்பட்டிருக்கலாம் அல்லது கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. இதனையடுத்து, உடுத்துறை, ஆழியவளை, தாளையடி, சுண்டிக்குளம், முல்லைத்தீவு போன்ற கரையோரப் பகுதி மக்கள் மீது படையினர் கோவமாக நடந்துகொண்டதோடு, மக்களனைவரையும் பொதுமைதானத்தில் நிறுத்தி வீடுவீடாக சோதனை மேற்கொண்டதோடு, மக்களையும் சோதனைக்குள்ளாக்கி மிகவும் சிரமப்படுத்தியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக