
கிராம சேவகர், வடக்கு மாகாண கிராம சேவையாளர் சங்கத்தின் தலைவர், திருநெல்வேலி இந்து வாலிபர் சங்கத்தின் தலைவர் உட்பட்ட பொதுப் பணிகளில் அயராது உழைத்த சிவராஜா அவர்கள் இறக்கும் போது அவருக்கு வயது 68.
2002 ஆம் ஆண்டு தமிழர்விடுதலைக் கூட்டணி தேர்தல்ப் பரப்புரை நடவடிக்கையில் ஈடுப


போர் நெருக்கடிகாலத்தில் வன்னி மக்களுடனேயே வாழ்ந்திருந்த அவர் போரின் பின்னர் வவுனியாவில் உள்ள இராணுவத்தினரின் நலன்புரி வாழ்வினையும் அனுபவித்தே யாழ்ப்பாணம் சென்றிருந்தார்.
கனகசபை சிவாராஜா அவர்களின் இறுதி நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் நடைபெற்றன.
திருநெல்வேலி இந்து வாலிபர் சங்க மண்டபத்தில் நடைபெற்ற இறுதி வணக்க நிகழ்விற்கு சூழ

நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுரேஸ் பிறேமச்சந்திரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வராசா கஜேந்திரன், சொலமன் சூ சிறில், பேராசிரியர் க. சண்முகதாஸ், வலம்புரி நாளிதழ் ஆசிரியர் விஜயசுந்தரம் உட்பட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு நினைவுரை ஆற்றினர்.
இறுதி நிகழ்விலும் இறுதி ஊர்வலத்திலும் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக