
மீண்டும் இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்ட வசாவிளான் மத்திய மகாவித்தியாலய சூழலில் சர்ச்சைக்குரிய வகையில் சித்திரவதைக் கூடங்களை அப்பகுதிப் பொதுமக்கள் அவதானித்துள்ளனர். முற்றுமுழுதாக கதவுகள் மூடி அடைக்கப்பட்ட நிலையில் இருண்ட அறைகளையும் அங்கு பெருமளவில் இரத்தம் சிந்தப்பட்ட தடயங்களையும் கண்டுள்ளனராம். அத்துடன் பலகைகள் கொண்ட கட்டில்கள் பல சித்திரவதை செய்வதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டும் குறிப்பாக முட்கம்பிகளால் கைகள் கட்டப்பட்ட நிலையில் சித்திரவதை செய்யப்பட்டதான முட்கம்பித் தடயங்களையும் அப்பகுதி மக்கள் கண்டனர் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக படை அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து, அவசர அவசரமாக சென்ற அதிகாரிகள் அங்கு பிரசன்னமாகியிருந்த அனைவரையும் திருப்பி அனுப்பியுள்ளனர். பின்னர் படையினர் மீண்டும் ஓரிரு வாரங்கள் அங்கிருந்து அனைத்தையும் சுத்திகரித்த பின்மே பாடசாலையை மீண்டும் வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை, வன்னி யுத்தத்தில் கைது செய்யப்பட்ட போராளிகளில் ஒரு தொககுதியினர் பலாலியில் உள்ள தடுப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிய வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக