19 மார்ச் 2011

புலிகளின் தலைவர் பற்றிய செய்தி உண்மைதானா என்று எனக்குத்தெரியாது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டுள்ளார் எனக் கூறுகிறார்கள். இதை யார் நேரில் கண்டது என ஸ்ரீலங்கா பிரதமர் டி.எம்.ஜயரத்ன கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் கொல்லப்பட்டு விட்டார் எனத் தெரிவித்தார்கள். உண்மையில் கொல்லப்பட்டது அவர் தானா என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது.
இவையல்லாம் நான் கேள்விப்பட்டவைகளே தவிர நேரில் சென்று எதனையும் பார்க்கவில்லை.
இதேபோன்று தான் அண்மையில் என்னால் தெரிவிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் பயிற்சி முகாம்கள் தமிழகத்தில் இயங்கி வருகின்றது என்ற தகவலும் ஆகும்.
பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டிருந்ததையும் யாரோ சொன்னதையும் தான் தெரிவித்தேன் என கண்டியில் அண்மையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் டி.எம்.ஜயரத்ன தெரிவித்திருக்கின்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக