14 மார்ச் 2011

படைகளின் கருத்தரங்கை புறக்கணிக்கிறது அமெரிக்கா!

சிறிலங்கா இராணுவம் ஏற்பாடு செய்துள்ள போர் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் கருத்தரங்கைப் புறக்கணிப்பதற்கு அமெரிக்காவும் ஜப்பானும் முடிவு செய்துள்ளதாக இணையத்தள செய்திகள் தெரிவித்துள்ளது.
‘தீவிரவாதத்தை தோற்கடித்த சிறிலங்காவின் அனுபவங்கள்‘ என்ற பொருளில் சிறிலங்கா இராணுவம் இந்தக் கருத்தரங்கை எதிர்வரும் மே 31ம் திகதி முதல் ஜுன் 2ம் திகதி வரை கொழும்பில் நடத்தவுள்ளது. இந்தக் கருத்தரங்கில் பங்கேற்க அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட 54 நாடுகளுக்கு சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் அழைப்பு அனுப்பியுள்ளார். ஆனால் ஜப்பானின் அரசியலமைப்பு இந்தக் கருத்தரங்கிற்குப் பிரதிநிதிகளை அனுப்புவதற்குத் தடையாக உள்ளது.
அதேவேளை அமெரிக்கா இந்த கருத்தரங்கைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. போர்க்குற்றங்கள் தொடர்பான அனைத்துலக விசாரணைகளை நடத்துவதற்கு சிறிலங்கா மறுப்பதற்கு, எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிய வருகிறது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்து இரண்டு ஆண்டுகளாகின்ற நிலையில் சிறிலங்கா அரசாங்கம் பல தொடர் நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகளைச் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்தக் கருத்தரங்கும் கூட சிறிலங்காவின் சுற்றுலா ஊக்குவிப்பு நடவடிக்கையாகவே கருதப்படுகிறது. ஆனால் சிறிலங்காவின் நல்லிணக்க முயற்சிகள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாக பொறுப்புக் கூறுதல் விடயங்களில் அமெரிக்க திருப்தி கொள்ளவில்லை. இதன் காரணமாகவே இந்த முடிவை எடுத்துள்ளது.
அதேவேளை மேலும் பல நாடுகள் இந்தக் கருத்தரங்கைப் புறக்கணிக்கவுள்ளதாகத் வெளிவந்துள்ளது குறிப்பிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக