10 மார்ச் 2011

மக்களின் நலனுக்காகவே பாடுபடுகிறாராம் மகிந்த!

நாட்டுக்காகவும் , நாட்டு மக்களுக்காகவும் மேற்கொண்ட தீர்மானங்களை, ஒருபோதும் பிற்போடப் போவதில்லை என ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மாத்தளை, நாவுல மைதானத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அனைத்தையும் விட மக்களின் அபிவிருத்தி முக்கியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது நாட்டில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் காணப்படுகின்றன.
எனவே எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள், அரசாங்கத்தை வீழ்த்தும் தேர்தலாக அன்றி, நாட்டை கட்டியெழுப்புகின்ற தேர்தலாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் தேர்தலை இலக்காக பாராமல், மக்களின் நலனுக்காகவே செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக