03 மார்ச் 2011

வல்வையில் சிங்களப்படைக்கும் மக்களுக்குமிடையில் முறுகல்!

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை மக்களை ஸ்ரீலங்கா படையினர் இன்று காலை 10 மணிக்கு முன்னர் குடும்பப் பதிவுக்கு அழைத்திருந்தார்கள். இது குறித்து சில புத்திஜீவிகள் யாழ் மாவட்ட அரச அதிபருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் தனக்கு எதுவும் தெரியாது என்றார்.
இந்த நிலையில் படைகள் பதிவுக்கு அழைத்தபோது, திடீரென இடம்பெறும் பதிவுக் குறித்து சிலர் முரண்பட்டுள்ளனர். வீதியில் வைத்தே பகிரங்கமாக மக்கள் ஸ்ரீலங்கா படைகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பதட்டமுற்ற படையினர் நியாயம் கேட்ட மகக்ளை கைது செய்தும் உள்ளனர். இந்தநிலையில் மக்களை கைது செய்தமைக்கு வல்வெட்டித்துறை மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வீதிகளில் ஆங்காங்கே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் படையினர் சில இடங்களை விட்டகன்று முகாம் திரும்பியதாகவும் கூறப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக