29 மார்ச் 2011

ஆசிரியரின் கொலைக்கு படைகளே பொறுப்பு!

யாழ்.சாவகச்சேரி இந்துகல்லூரி ஆசிரியர் சம்பந்தன் சக்திதரன் கொலைக்கு இராணுவத்தினரும் பொலிசாருமே பொறுப்புக் கூற வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். கடந்த வாரம் இராணுவத்தினரால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்த நிலையில் நேற்று முன்னாள் உயிரிழந்திருந்த ஆசிரியர் சம்பந்தன் சக்திதரனின் இறுதி நிகழ்வு இன்று குப்பிளானில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாடசாலை சமூகத்தினர், மக்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்கு கொண்டிருந்தனர். பிற்பகல் இரண்டு மணியளவில் அவரது இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட சடலம் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது வீட்டில் நடைபெற்ற இறுதி நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா உரை நிகழத்தினார். அவர் தனதுரையில், முழு நிர்வாகமும் இராணுவத்தினரின் கண்காணிப்பின் கீழேயே உள்ளமையால் இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் பதில்கூற வேண்டிய பொறுப்பு இராணுவத்தினருக்கும் பொலிசாருக்குமே உள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்.மாவட்ட இராணுவத்தளதியிடம் பேச்சு நடத்தப்போவதாகத் தெரிவித்த மாவை, நாடாளுமன்றத்திலும் இது தொடர்பில் உரை நிகழ்த்தப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக