
அமைச்சர் டக்ளஸ் தே

வன்னிப் போர் தீவிரம் பெற்றிருந்த 2009 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாடகர் சுகுமார் அம்பலவன் பொக்கணை கிராமம் ஊடாக இராணுவ ஆக்கிரமிப்புப் பிரதேசத்தினைச் சென்று சேர்ந்து படையினரிடம் சரணடைந்திருந்தார். ஆனாலும் அவர் தடுப்பு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கவில்லை.
பாடகர் சாந்தன் 2009ம் ஆண்டு மேமாதம் 18ம் திகதி இராணுவத்தினரிடம் சரணடைந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டு இராணுவத்தினரின் தடுப்பு முகாமில் இருந்து கடந்த ஆண்டு இறுதிப் பகுதியிலேயே விடுவிக்கப்பட்டிருந்தார்.
தேசியத்தலைவர் அவர்களையும், கரும்புலிகளையும், மாவீரர்களையும் பாடியவர்கள் இன்று தமிழின அழிப்பில் பெரிதும் துணைநின்ற சிங்கள அரசில் அமைச்சராகவுள்ள டக்ளஸ் தேவானந்தாவைப் புகழ்ந்து பாடியிருப்பது தமிழ் மக்கள் மிகுந்த வருத்தத்தினைத் தோற்றுவித்திருக்கின்றது என்றார் இசைக்கலைஞர் ஒருவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக