24 மார்ச் 2011

ஸ்ரீலங்காவிற்கான நிதி உதவி நிறுத்தம்.

சிறீலங்காவின் சுற்றுச்சூழல் அபிவிருத்திக்கு வழக்கப்படுவதாக தீர்மானிக்கப்பட்ட 30 மில்லியன் டொலர் கடன் உதவி நிறுத்தப்படுவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
சிறீலங்காவின் சுற்றுச்சூழல் அபிவிருத்திக்கு 30 மில்லியன் டொலர்களை வழங்குவதாக உலக வங்கி 2009 ஆம் ஆண்டு தெரிவித்திருந்தது. அதற்கான கூட்டம் ஒன்று கடந்த மாதம் 21 மற்றும் 22 ஆம் நாட்களில் நடைபெறவிருந்தது.
ஆனால் தமது அபிவிருத்தி திட்டங்களில் சில மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளதாக சிறீலங்கா அரசு தெரிவித்ததை தொடர்ந்து உலக வங்கி தனது நிதி உதவியை நிறுத்தியுள்ளது.
இதனிடையே, வெள்நாட்டு நிறுவனங்கள் அபிவிருத்திக்கு என வழங்கும் நிதிகளை சிறீலங்கா அரசு தனது தேவைகளுக்கு பயன்படுத்தி வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக