14 மார்ச் 2011

ஸ்ரீலங்கா படைகளின் கருத்தரங்கை புறக்கணிக்குமாறு வேண்டுகோள்!

விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த அனுபவங்கள் குறித்து விளக்கமளிக்கும் நோக்கில் ஸ்ரீலங்கா இராணுவம் மூன்று நாள் கருத்தரங்கை நடத்தவுள்ளது. எதிர்வரும் மே 31ம் திகதி தொடக்கம் ஜுன் 2ம் திகதி வரை கொழும்பு கலதாரி விடுதியில் இந்தக் கருத்தரங்கை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தக் கருத்தரங்கில் பங்கேற்குமாறு ஸ்ரீலங்கா பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ச 54 நாடுகளுக்கு அழைப்புகளை அனுப்பியுள்ளார். ஆனால் இந்தக் கருத்தரங்கைப் புறக்கணிக்கமாறு மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் இந்த நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக மனிதஉரிமைகள் கண்காணிப்பகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பிறட் அடம்ஸ் பிபிசி 'சந்தேசய' வுக்கு கூறுகையில்,
இந்தக் கருத்தரங்கில் பங்கேற்பதில்லை என்று பல முக்கிய அழைப்பாளர்கள் முடிவு செய்துள்ளதைப் புரிந்து கொள்ள முடிகிறது. பெருமளவு பொதுமக்களைப் படுகொலை செய்த நிகழ்வுடன் தொடர்புடைய இராணுவக் கொள்கையைக் கொண்டாடும் வகையிலான இந்தக் கருத்தரங்கைப் புறக்கணிக்குமாறு அனைத்துலக நாடுகளை கேட்டுக் கொள்கிறோம்.� என்று தெரிவித்தார்.
இந்தக் கருத்தரங்களில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், அதிபரின் செயலர் லலித் வீரதுங்க, பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச, மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால், தீவிரவாத முறியடிப்பு நிபுணர் கலாநிதி றொகான் குணரட்ண மற்றும் போரில் பங்கெடுத்த இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் பேச்சாளர்களாக கலந்து கொள்ளவுள்ளனர்.
உலகளாவிய தீவிரவாதத்தை முறியடிப்பதற்காக இலங்கையின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் நோக்கிலேயே இந்தக் கருத்தரங்கு நடத்தப்படவுள்ளதாக இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.
ஆனால் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கைஇராணுவத்தினரால் கையாளப்பட்ட பல தந்திரோபாயங்கள் சட்டவிரோதமானவை என்று மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளது.
உலகின் எந்த இராணுவமாயினும் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்றால், இலங்கை இராணுவத்தின் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பாக பேச வேண்டும். அதேவேளை இலங்கை அரசின் கோட்பாட்டை பின்பற்ற முனையக் கூடாது� என்றும் மனிதஉரிமைகள் கண்காணிப்பகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அடம்ஸ் கேட்டுள்ளார். இது ஒரு உண்மையான நிகழ்ச்சி நிரலாக இருந்தால், இது சுதந்திரமானதாக நடத்தப்பட வேண்டும்.
அத்துடன் போரின் தீமைகள் நல்லதா கெட்டதா என்று பார்க்கவும் நடுநிலையாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டும். அப்போது தான் இந்தக் கருத்தரங்கை வரவேற்க முடியும். ஜப்பானின் அரசியலமைப்பு அனைத்துலக ஆயுத மோதல்களில் தலையிடுவதை அனுமதிக்கவில்லை.
எனவே கொழும்பில் நடைபெறவுள்ள இந்தக் கருத்தரங்கில் இருந்து அவர்கள் தொலைவிலேயே உள்ளனர். தேசியப் பிரச்சினைக்கு அரசியல் மறுசீரமைப்பு மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை அரசாங்கம் அடிக்கடி பொய் கூறி வருகிறது. அவர்கள் எப்போதும் கூறுவது போல அரசியல் மறுசீரமைப்பு ஒன்றை ஒருபோதும் செய்யப் போவதல்லை என்று என்னால் உறுதியாகக் கூறமுடியும்.
அரசியல் மறுசீரமைப்பு பேச்சுகளின் ஒரு அங்கமாக இருந்தாலும் அவர்களால் அதைச் செய்ய முடியாது. அது வெறும் வெட்டிப் பேச்சு. இது அடிப்படையில் ஒரு பொய். விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத அமைப்பு என்பதில் நாம் சந்தேகம் கொள்ளவில்லை.
நாம் புலிகளை மிக அதிகமாகவே விமர்சித்துள்ளோம். ஆனால் அவர்களை அழிப்பதற்காக பொதுமக்கள் தாக்கப்பட்டதை ஏற்க முடியாது.
விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் இந்தக் கருத்தரங்கு நடத்தப்படுவது தமிழ்ச் சமூகத்துக்கு ஒரு கோரமான தகவலைச் சொல்கிறது என்றும் அடம்ஸ் மேலும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக