20 மார்ச் 2011

நிபுணர் குழு அறிக்கை பகிரங்கப்படுத்தபடவேண்டும் என்கிறது ஐரோப்பிய ஒன்றியம்.

சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஆலோசனைகளை வழங்குவதற்காக ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் அமைக்கப்பட்ட ஆலோசனைக்குழுவின் அறிக்கை பொதுமக்களுக்கு வெளியிடப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இது தொடாபில் மேலும் தெரிவருவதாவது:
ஐ.நாவின் போர்க்குற்ற ஆலோசனைக்குழு தனது அறிக்கையை பூர்த்தி செய்துள்ளது. அதில் சிறீலங்கா தொடர்பில் மிகவும் அழுத்தமான தகவல்கள் உள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார்..
அதாவது ஐ.நாவின் அறிக்கை சிறீலங்கா அரசுக்கு சாதகமானது அல்ல என அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஆனால் ஐ.நாவின் அறிக்கை பொதுமக்களுக்கு வெளிப்படையாக வெளியிடப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் பான் கீ மூனுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது.
எனினும் இந்த மாதம் சமர்ப்பிக்கப்படும் இந்த அறிக்கை பொதுமக்களின் பார்வைக்கு அளிக்கப்படுமா என்பது தொடர்பில் இதுவரை முடிவுகள் மேற்கொள்ளப்படவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக