13 மார்ச் 2011

புலிகளின் முக்கியஸ்தர்கள் அரச புலனாய்வு பிரிவில் என்கிறது லங்கா கார்டியன்!

ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பிடியில் சிக்கியுள்ள விடுதலைப்புலிகளின் முக்கியஸ்த்தர்கள் அரசாங்கத்தின் புலனாய்வு சேவையில் இணைக்கப்படவுள்ளதாக லங்கா காடியன் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் விளையாட்டுத்துறை பொறுப்பாளர் பாபா, பொருளாதாரத்துறை பொறுப்பாளர் கரிகாலன், யோகரட்ணம் யோகி, மூத்த உறுப்பினர் பாலகுமார், முன்னாள் பேச்சாளர் லோரன்ஸ் திலகர், யாழ்ப்பாண பொறுப்பாளர் இளம்பரிதி, திருகோணமலை பொறுப்பாளர் எழிலன், நிர்வாகப்பொறுப்பாளர் பூவன்னன், சர்வதேச உதவிபொறுப்பாளர் ஞானம் உள்ளிட்ட முக்கிய உறுப்பினர்கள் அரச புலனாய்வு சேவையில் இணைக்கப்படவுள்ளமை உறுதியாகியுள்ளதாக லங்கா காடியன் தகவல் வெளியிட்டுள்ளது.
அதில் பாபா ஏற்கனவே இலங்கை அரசின் புலனாய்வுப்பிரிவில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் லங்கா காடியன் கூறியுள்ளது.
பாலகுமார் மற்றும் யோகி ஆகியோர் இறுதிச் சண்டையின் போது இறந்து விட்டதாக ஏற்கனவே அமைச்சர் டியு குணசேகர தெரிவித்திருந்தார்.
எனினும், 2009 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதியன்று, லங்கா பெஸ்ட் என்ற இணைத்தளத்துக்கு தகவல் வழங்கியிருந்த அரசாங்கம் தகவல் திணைக்கள தரப்புக்கள், தமிழீழ விடுதலைப்புலிகள் உயர் தலைவர்கள் தீவிரமான விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டமையை லங்கா காடியன் சுட்டிக்காட்டியுள்ளது.
பாபா, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புலனாய்வு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
புலிகளுடன் தொடர்புடையர்கள் விமான நிலையத்துக்குள் வரும் போதும் வெளியேறும்போதும் அவர்கள் தொடர்பாக தகவல்களை வழங்குவதே பாபாவின் பொறுப்பாக அமைந்துள்ளது.
இவரின் தகவல்படி, விமான நிலையத்தில் உள்ள கணணி, குறித்த சந்தேகநபர் கைது செய்யப்படும் வரை சமிஞ்சைகளை காட்டிக்கொண்டிருக்கும்.
வெளிநாட்டில் இருந்து செல்லும் இலங்கையர்கள் புலிகளுடன் தொடர்புடையவர்களாக கருதப்பட்டால், அவர்கள் விசேடமான முறையில் விசாரிக்கப்படுகிறார்கள். இவர்களை சிங்கள அதிகாரிகள் விசாரணை செய்யும் அதேநேரம் தமிழில் பாபா விசாரணை செய்வார்.
எனினும் புலிகளுடன் தொடர்புகளை கொண்டவர்கள் என கைது செய்யப்படுபவர்கள், எங்கே தடுத்து வைக்கப்படுகிறார்கள் என்பது தொடர்பில் குடிவரவு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துவதில்லை என லங்கா காடியன் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை விடுதலைப் புலிகளின் உயர்மட்டத் தலைவர்கள் 100 பேர் வரையில் அரச படையினரால் தனியான இடம் ஒன்றில் வைத்து கொல்லப்பட்டதாகவும் முன்னர் தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக