23 மார்ச் 2011

தமிழினியை தொடர்ந்து தடுத்து வைக்க ஸ்ரீலங்கா நீதிமன்றம் உத்தரவு!

தமிழீழ அரசியற்துறையின் மகளிர் பிரிவு பொறுப்பாளராக விளங்கிய தமிழினியை எதிர்வரும் மே,9ம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியவில் வைக்குமாறு ஸ்ரீலங்காவின் கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழினி எனப்படும் சுப்பிரமணியம் சிவகாமியை நேற்று நீதிமன்றில் ஆஜர்படுத்திய ஸ்ரீலங்கா இரகசியப் பொலிஸார் அறிக்கை ஒன்றையும் சமர்பித்தனர்.
குறித்த அறிக்கையை பரிசீலித்த கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. சட்டமா அதிபர் வழங்கும் ஆலோசனைக்கு அமைய தமிழினி குறித்து எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இரகசியப் பொலிஸார் நீதிமன்றிற்கு அறிவித்துள்ளனர். வன்னி இறுதிக் கட்ட யுத்தத்தின் போது அரச படைகளிடம் சரணடைந்த தமிழினியை இரகசியப் பொலிஸார் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக