06 மார்ச் 2011

பியசேனாவின் கன்னத்தில் விழுந்த பளார்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முடியப்பு பியசேனவின் கன்னத்தில் பெண் ஒருவர் அறைந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
முடியப்பு பியசேன இன்று அம்பாறை கல்முனையில் உள்ள சேனைக்குடியிருப்புக் கிராமத்திற்கு தேர்தல் கலந்துரையாடல் ஒன்றிற்குச் சென்றிருக்கின்றார். அவ்வேளை அங்கு நின்றிருந்த மக்களுக்கும் அவருக்கும் இடையில் நீண்ட வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தை அடுத்து ஆத்திரமடைந்த அன்னம்மாள் என்ற பெண் பியசேனவின் கன்னத்தில் அறைந்ததாக அம்பாறையில் இருந்து எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பில் இருந்து வெளியேறியதன் பின்னர் பியசேன வாங்கிய நான்காவது அடி இது என்றும் எமது செய்தியாளர் மேலும் தெரிவிக்கின்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக