
கிளிநொச்சியிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது அனுராதபுரம் நொச்சிகாமம் பகுதியில் வைத்து இந்த சம்பவம் நடந்துள்ளது.
சம்பவத்தில் இனந்தெரியாதவர்கள் கைக்குண்டுத்தாக்குதல் நடத்தியதோடு தொடர்ச்சியாக துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டுள்ளது.
இதில் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரது சகாக்கள் எவ்வித ஆபத்துமின்றி தப்பியுள்ளனர்.
அவர்கள் அனைவரும் தற்போது பாதுகாப்பான இடத்தில் பதுங்கியிருப்பதாகவும் கூட்டமைப்பினர் பொலிஸ்மா அதிபர் மற்றும் இராணுவத்தினருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.
சம்பவத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பயணித்த வாகனம் மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக