11 மார்ச் 2011

நாடுகடத்தப்பட்டால் ஸ்ரீலங்காவில் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவார்!

கடந்த வருடம் கனடாவை சென்றடைந்த சன் சீ கப்பலில் பயணித்த ஈழத்தமிழ் மக்களில் ஒருவரை நாடுகடத்த திட்டமிட்டுள்ளதாக கனடா தெரிவித்துள்ளது. ஆனால் கனடாவின் இருந்து அவர் திருப்பி அனுப்பப்பட்டால், சிறீலங்கா அரசின் துன்புறுத்தல்களை அவர் எதிர்கொள்ள நேரிடலாம் என பாதுகாப்பு காரணங்களுக்காக பெயர் குறிப்பிடப்படாத ஈழத்தமிழ் மகன் சார்பாக வாதாடும் வழக்கறிஞர் றொபின் பாஜர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
விடுதலைப்புலிகள் அமைப்பில் முன்னர் பணியாற்றினார் என்ற காரணங்களை முன்வைத்து ஈழத்தமிழர் ஒருவரை நாடுகடத்த கனடா அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் அவர் 10 வருடங்களுக்கு முன்னர் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து வெளியேறிவிட்டார்.
அதன் பின்னர் அவருக்கு இயக்கத்துடன் தொடர்புகள் இருந்ததில்லை. எனவே 10 வருடங்களுக்கு முன்னர் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து வெளியேறியவர்களால் கனடாவின் பாதுகாப்புக்கு என்ன ஆபத்து ஏற்படும்?
மேலும் கனடாவின் இந்த முடிவுக்கு எதிராக நாம் மேன்முறையீடு செய்ய முடியும்.
கனடா அரசு அவரை நாடுகடத்தினால் சிறீலங்காவில் அவர் கடுமையான துன்புறுத்தல்களை எதிர்கொள்ள நேரிடலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக