16 மார்ச் 2011

தமிழ் தாலி கட்டியிருந்த பெண் கனடாவில் தடுத்துவைப்பு!

கடந்த வருடம் கனடாவுக்கு சென்று அடைக்கலம் கோரிய ஈழத்தமிழ் பெண் ஒருவர் தமிழ் தாலி கட்டியது தொடர்பில் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் கனடாவின் வன்கூவர் கடற்கரையை சென்றடைந்த சன் சீ என்ற கப்பலில் சென்ற 492 ஈழத்தமிழ் மக்களில் பலரை தொடர்ந்தும் கனடா அரசு தடுத்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களை தடுத்து வைத்திருப்பதற்கான ஆதராங்களை கனேடிய அதிகாரிகள் இதுவரை சமர்ப்பிக்கவில்லை. வன்னியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வசித்த பெண் ஒருவர் தமிழ் தாலி கட்டிய குற்றத்திற்காக அவரின் பிள்ளைகளுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கப்பலில் சென்றடைந்த 63 பெண்களில் 25 பெண்கள் அவர்களின் பிள்ளைகளுடன் சிறையில் அடைக்கப்பட்டபோதும், அவர்களில் ஒருவர் மட்டுமே தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பிட்ட பெண் கட்டியுள்ள தமிழ் தாலி தொடர்பில் முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்படும்வரை அவர் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக