22 மார்ச் 2011

காணாமல் போனோர் தொடர்பாக ஐ.நா.ஆராய்வு.

இலங்கையில் கடத்தப்பட்டுக் காணாமற்போனோர் தொடர்பாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் தூதரகம் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. மெக்ஸிக்கோ நாட்டின் தலைநகரான மெக்ஸிக்கோ சிற்றியில் கடந்த 15 முதல் 18 வரையான நான்கு நாள்கள் நடைபெற்ற உயர் மட்ட மாநாட்டில் இந்த விவகாரம் சர்வதேசப் பணிக்குழுவால் விரிவாக ஆராயப்பட்டது என்று ஐ.நா. நேற்று வெளியிட்ட அறிக்கை கூறுகின்றது.
பலவந்தமாகக் காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் மற்றும் தாமாகவே காணாமல்போனவர்கள் தொடர்பில் ஆராயும் ஐ.நாவின் சர்வதேசப் பணிக்குழு கடந்த வாரம் மெக்ஸிக்கோ சிற்றியில் கூடியது.
இதில் காணாமல்போனவர்கள் குறித்த 200க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் குறித்து தீவிர கவனம் செலுத்தப்பட்டன. அவற்றில் 11 முறைப்பாடுகளுக்கு முன்னுரிமை கொடுத்து பணிக் குழு செயற்பட்டது என்று ஐ.நா. அறிக்கை கூறியது.
இலங்கை உட்பட 23 நாடுகளில் காணாமல்போனவர்கள் தொடர்பில் பணிக் குழு, இந்தக் கூட்டத்தொடரில் கவனம் செலுத்தி இருந்தது. காணாமல்போனவர்கள் தொடர்பில் அகதிகளுக்கான ஐ.நா. தூதரகம் விடுத்த அவசரக் கோரிக்கைகள் மற்றும் கடிதங்களுக்கு அரசுகள் எத்தகைய எதிர்வினையாற்றின என்பதையும் சுயாதீனமான மனித உரிமைகள் நிபுணர்கள் 5 பேர் அடங்கிய பணிக்குழு ஆராய்ந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக