17 மார்ச் 2011

இப்படியும் ஈனப்பிறவிகள்!

அரியாலை பூம்புகார் பகுதியில் கன்று ஈன்று இரு நாட்களே ஆன பசு மாட்டை கொலை செய்து அதன் இறைச்சியையும் கன்றையும் ஆட்டோ ஒன்றில் ஏற்றிச் சென்ற பரிதாபிமான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு தாய்ப் பசுவைக் கொலை செய்து அதன் இறைச்சியையும் கன்றுக் குட்டியையும் கடத்திச் சென்ற மூன்று திருடர்களும் ரோந்தில் சென்ற ஸ்ரீலங்கா படையினரிடம் வசமாக மாட்டிக் கொண்டார்கள்.
அவர்களைச் செம்மையாக நையப்புடைத்த படையினர் அவர்கள் கொண்டு வந்த பசுவின் தோல் மற்றும் உறுப்புக்களால் அவர்களை அலங்கரித்து அடித்து விரட்டி ஊர்வலமாக வீதி வழியே கொண்டு திரிந்த காட்சியை பொதுமக்கள் கண்டு களித்தார்கள்.
உடனடியாக அவர்களை தமது முகாமிற்கு கொண்டு சென்ற ஸ்ரீலங்கா படையினர் அவர்களை செம்மையாக கவனிக்கவே தங்களால் திருடப்பட்டு கொலை செய்யப்பட்ட பசு மாட்டின் கழிவு, உறுப்புகள் என்பனவற்றை புதைத்த இடத்தையும் உரிமையாளரையும் அடையாளம் காட்டியுள்ளார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக