09 மார்ச் 2011

தமிழ் நாட்டில் பயிற்சி முகாம்கள் என்கிறார் ஸ்ரீலங்கா பிரதமர்!

தமிழ் நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம்கள் காணப்படுவதாக ஸ்ரீலங்காவின் பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
தமிழ் நாட்டில் மூன்று ரகசிய பயிற்சி முகாம்கள் காணப்படுவதாக அவர் இன்று பாராளுமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த முகாம்களில் ஒன்றில் விசேட பிரபுக்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தும் தீவிரவாத பயிற்சி அளிக்கப்பட்டு;ள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் இல்லாதொழிக்கப்பட்ட போதிலும் சர்வதேச ரீதியில் புலிகள் வலையமைப்பின் அச்சுறுத்தல் நீடிப்பதாக இனவாத ஸ்ரீலங்கா அரசின் பிரதமர்
டி.எம்.ஜெயரட்ன தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக