30 மார்ச் 2011

புலம்பெயர் தமிழரின் போராட்டத்தை மழுங்கடிக்க வேண்டுமாம்.

போரிடும் தகைமையை தமிழீழ விடுதலைப் புலிகள் இழந்துள்ளனர்.ஆனால் புலம்பெயர் தமிழ்ச் சமூகம் இழக்கவில்லை. அவர்களின் போராட்டத்தை மழுங்கடிப்பதற்கு அதிகளவிலான அரசசார்பற்ற நிறுவனங்களை அரசு உருவாக்க வேண்டும் என சிங்கப்பூரின் நாங்யாங் பல்கலைக்கழகத்தின் சர்வதேச விவகார மற்றும் பயங்கரவாத தடுப்பு தொடர்பான விரிவுரையாளரான ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார். இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம் பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் புலம்பெயர் தமிழர்கள் மேற்கொண்டுவரும் பிரசாரங்களை முறியடிப்பதற்கு அதிகளவான அரச சார்பற்ற நிறுவனங்களை அரசு உருவாக்க வேண்டும் என ரொஹான் குணரட்ன கொழும்பில் உள்ள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். மனித உரிமை அமைப்புக்களின் ஊடாக புலம்பெயர் தமிழ் மக்கள் மேற்கொண்டு வரும் போராட்டங்களை இதன்மூலம் முறியடிக்க முடியும். வெளிவிவகார அமைச்சு இதற்கான நடவடிக்கைகளை எடுக்கலாம். நோர்வேயில் இயங்கிவரும் ஜீ.ரி.எப். அமைப்பு தமிழீழ விடுதலைப்புலிகளின் மறுவடிவமேயா கும். நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தை உருவாக்க முனைப்பு காட்டி வரும் உருத்திரகுமாரை விடவும் நெடியவன் ஆபத்தானவர். உருத்திரகுமாரன் இலங்கை அரசாங்கத்துடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளக்கூடிய அரசியல் சாணக்கியத்தைக் கொண்டவர். நெடியவன் தீவிர போராளி எனவும் தெரிவித்த ரொஹான் குணரட்ன, இலங்கைக்கு எவ்வாறான தீர்வுத் திட்டங்களை வழங்கவேண்டும் என்பது குறித்து பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக் வுக்கு தெளிவான விளக்கம் காணப்படுவதாகவும், தேவை ஏற்பட்டால் கடுமையான குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சிரேஷ்ட விடுதலைப்புலிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த கோத்தபாய தயங்க மாட்டார் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக