
விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரான இவர் புனர்வாழ்வளிக்கப்பட்டு அண்மையிலேயே விடுவிக்கப்பட்டிருந்தார். புனர்வாழ்வு முகாமின் மற்றுமொரு பெண் போராளியை இவர் விரும்பியிருந்ததனை அடுத்து படையினரின் ஏற்பாட்டில் அவருக்கு திருமணமும் செய்து வைக்கப்பட்டது. இவரது மனைவி தற்பொழுது கர்ப்பவதியாக உள்ளார்.
25 வயதுடைய புஸ்பராஜா விஜயபாகு எனும் முன்னாள் போராளியே காணாமல் போயிருக்கின்றார். திங்கட்கிழi காலை மல்லாவியில் இருந்து புறப்பட்டதை அவரது மனைவி உறுதிப்படுத்தியிருக்கின்றார். இந்நிலையில் காட்டுக்குள் சென்ற இவர் திரும்பியிருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. இவருக்கு என்ன நடந்திருக்கலாம் எனும் சர்ச்சைகள் தொடர்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக