17 மார்ச் 2011

வேட்டைக்குசென்ற முன்னாள் போராளியை காணவில்லை!

வன்னி மல்லாவி கள்ளுவான் காட்டுப்பகுதியில் வேட்டைக்குச் சென்ற விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் காணாமல் போயிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. கடந்த திங்கட்கிழமை காலை 8 மணியளவில் முயல் வேட்டைக்கென தாங்கள் வைத்த பொறிகளில் முயல்கள் அகப்பட்டிருக்கின்றனவா என பார்ப்பதற்காக இவர் வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றதாக மனைவி கூறுகின்றார்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரான இவர் புனர்வாழ்வளிக்கப்பட்டு அண்மையிலேயே விடுவிக்கப்பட்டிருந்தார். புனர்வாழ்வு முகாமின் மற்றுமொரு பெண் போராளியை இவர் விரும்பியிருந்ததனை அடுத்து படையினரின் ஏற்பாட்டில் அவருக்கு திருமணமும் செய்து வைக்கப்பட்டது. இவரது மனைவி தற்பொழுது கர்ப்பவதியாக உள்ளார்.
25 வயதுடைய புஸ்பராஜா விஜயபாகு எனும் முன்னாள் போராளியே காணாமல் போயிருக்கின்றார். திங்கட்கிழi காலை மல்லாவியில் இருந்து புறப்பட்டதை அவரது மனைவி உறுதிப்படுத்தியிருக்கின்றார். இந்நிலையில் காட்டுக்குள் சென்ற இவர் திரும்பியிருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. இவருக்கு என்ன நடந்திருக்கலாம் எனும் சர்ச்சைகள் தொடர்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக