30 மார்ச் 2011

மக்களை கொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லையென்கிறார் மகிந்த.

லிபியாவின் மக்கள் சரியான திசையில் செல்வதாக சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா தெரிவித்துள்ளார். நேற்று முனத்தினம் (28) அலரிமாளிகையில் அனைத்துலக மற்றும் உள்ளூர் ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே மகிந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார். லிபியாவுக்கு ஆதரவாக சிறீலங்கா அரசு தொடர்ச்சியாக மேற்கொண்ட நடவடிக்கைகளை தற்போது அது கைவிடத்திட்டமிட்டுள்ளதா என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன. எனினும் லிபியா மீதான தாக்குதலை நேட்டோ படையினர் பொறுப்பேற்றதே மகிந்தாவின் மாற்றத்திற்கான காரணம் என கொழும்பு இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர். யாரும் பொதுமக்களை கொல்லமுடியாது, அதற்கான அதிகாரம் யாருக்கும் கிடையாது என மகிந்தா தெரிவித்துள்ளார். ஆனால் சில வாரங்களுக்கு முன்னர் லிபிய அதிபரை தொலைபேசியில் தொடர்புகொண்ட மகிந்தா தாம் லிபியாவுக்கு ஆதரவுகளை வழங்குவதாக தெரிவித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக