27 மார்ச் 2011

மகிந்தவை கண்டதும் நடுங்கிய எம்பி!

கடந்த செவ்வாய்க்கிழமை (22) சிறீலங்கா நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின் போது, சிறீலங்கா அரசு காலிமுகத்திடலில் நிலத்தை விற்பனை செய்வது தொடர்பில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சிறீலங்கா அரச தலைவரை கண்டதும், பேச்சை மாற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது. காலிமுகத்திடலில் உள்ள நிலங்களை சிறீலங்கா அரசு குறைந்த விலையில் விற்பனை செய்து பெரும் ஊழல்களை மேற்கொண்டுவருவதாக ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் உரையாற்றிக்கொண்டிருந்த சமயம், மகிந்தா அங்கு வந்திருந்தார். மகிந்தாவை கண்டதும் அச்சத்தால் நடுக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் தனது பேச்சை நிறுத்திவிட்டார். அதனை தொடர்ந்து அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும் சத்தமிட்டு சிரித்ததுடன், மகிந்தா இருக்கும்போதே அவரை தொடர்ந்து பேசுமாறும் கோரிக்கைவிடுத்திருந்தனர். ஆனால் உடனே பேச்சை மாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர், இந்த விடயங்களை கேட்கவேண்டியது தனது கடமை என தெரிவித்ததுடன், மகிந்தா தனது பேச்சை கேட்டது மிக்க மகிழ்ச்சி தருவதாகவும் தெரிவித்து தனது உரையை உடனடியாகவே முடித்துக்கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக