18 மார்ச் 2011

த,தே,கூட்டமைப்பு பல சபைகளை கைப்பற்றியுள்ளது.

நேற்று நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 12 சபைகளைக் கைப்பற்றியுள்ளது.
வவுனியா வடக்கு
வவுனியா தெற்கு
வவுனியா செட்டிகுளம்
மன்னார் நகரசபை
மன்னார் பிரதேச சபை
மன்னார் நாநாட்டான்
முல்லைத்தீவு மாந்தை மேற்கு
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு
அம்பாறை நாவிதன்வெளி
அம்பாறை ஆலையடிவேம்பு
திருகோணமலை நகரசபை
திருகோணமலை ஈச்சிலம்பற்று
ஆகிய உள்ளூராட்சி சபைகளே அவைகளாகும் அத்துடன் மூதூரில் மூன்று ஆசனங்களைப் பெற்று எதிர்க் கட்சியாக தெரிவாகி உள்ளது.
இந்த தேர்தல் தொடர்பாக கருத்துத் தெரிவித்த மட் மாவட்ட தமிழ் தேசி கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அவர்கள் கூறும்போது.
இந்த அரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பை தோற்கடிப்பதற்கு பல முயற்சிகளையும் மேற்கொண்டது ஆனால் தமிழ் மக்களின் அரசியல் சக்தி தமிழ் தேசிய கூட்டமைப்புத்தான் என்பதனை மீண்டும் மக்கள் நிரூபித்திருக்கிறார்கள்.
நடந்து முடிந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு முதலாவதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இரண்டாவது பெரிய அரசியல் சக்தியாகவும் திகழ்கின்றது எனவே தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயமாக விரைவான முறையில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் அரசு பேசுவதற்கான ஆணையை தமிழ் மக்கள் வழங்கி இருக்கிறார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக