
28 ஜூன் 2015
ஐ.நா.போர்க்குற்ற அறிக்கையில் மகிந்த சகோதரர்கள்?

20 ஜூன் 2015
வித்தியா கொலை தடையங்களை அழிக்க சிரமதானம்!துவாரகேஸ்வரன் குற்றச்சாட்டு!

யாழ்.ஊடக அமையத்தினில் அவர் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டினில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மற்றும் சட்டத்தரணி தவராசா ஆகியோர் இவ்விடயத்தினில் பின்னின்று செயற்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
வித்தியா படுகொலை தொடர்பிலான சான்றாதரங்களை அழிப்பதற்கு சிரமதானமென்ற பேரினில் புங்குடுதீவினில் கனரக வாகனங்கள் மூலம் தடயங்கள் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.வித்தியாவினது உறவுகளது எதிர்ப்பினை தாண்டி அவ்வாறு தடயங்கள் அகற்றப்பட்டுள்ளன.
வித்தியா படுகொலை வழக்கினை குழப்பியடிக்கவும் குற்றவாளிகளை தப்ப வைக்கவும் சுவிஸிலிருந்து பெருமளவு பணம் கைமாற்றப்பட்டுள்ளது.இது தொடர்பான ஆவணங்கள் எனக்கு கிட்டியுள்ளது.அவை விரைவினில் அம்பலப்படுத்தப்படும்.
சட்டத்தரணி தவராசா பொறுப்பாக கடமையாற்றாமையினாலேயே அரச சட்டத்தரணிகளாக மூவரை கொழும்பிலிருந்து தருவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.அவர்களுள் ஒருவர் எனது சகோதரன் மகேஸ்வரன் படுகொலை சூத்திரதாரிக்கு மரணதண்டனை வாங்கிக்கொடுத்த திறமையாளன்.
வித்தியா கொலை சூத்திரதாரிகள் தண்டிக்கப்படவேண்டுமென்பதில் நாம் உறுதியாக உள்ளோம்.மக்களது நிலைப்பாடும் அவ்வாறாகத்தான் உள்ளது.
குற்றவாளிகளை தப்பிக்க வைக்க இத்தகைய கும்பல்கள் செய்யும் முயற்சி வெற்றி அளிக்காதெனவும் அதற்கு மக்கள் அனுமதிக்கப்போவதில்லையெனவும் துவாரகேஸ்வரன் தெரிவித்தார்.
அரசியல் நோக்கமேதுமின்றி வித்தியாவின் படுகொலையாளிகள்; தண்டிக்கப்படவேண்டுமெனவும் அதற்காக குரல் கொடுத்து சிறை சென்றிருந்த 150 பேரிற்கும் பொறுப்பாக வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
01 ஜூன் 2015
ஓமந்தையில் சிறுமி மர்மமான முறையில் மரணம்!
![]() |
உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினர் |
இந்த சிறுமியின் தாய் தந்தையர் வவுனியா நகருக்கு முக்கிய அலுவல் காரணமாகச் சென்றிருந்தபோது தனிமையில் அந்த சிறுமி வீட்டில் இருந்தபோதே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நான்கு மாதங்களாகப் பாடசாலைக்குச் செல்லாதிருந்த இந்தச் சிறுமியே, தனது தாயார் இரண்டு வருடங்களாக வெளிநாட்டுக்கு வேலைக்காகச் சென்றிந்தபோது சமையல் உள்ளிட்ட வீட்டு வேலைகளைச் செய்து வந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து உடனடியாக மரண விசாரணை அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார். சம்பவ இடத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும் சென்றிருந்தார். உயிரிழந்த சிறுமியின் சடலத்தை வவுனியா வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்காக ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நன்றி:பிபிசி தமிழோசை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)