29 செப்டம்பர் 2014

மகிந்தவின் அமைச்சர்கள் ஐ.தே.கட்சியில் இணையவுள்ளனராம்?

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் விரைவில் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராஜபக்ஷ அரசாங்கத்தில் இருந்து எதிர்க்கட்சியில் இணையும் முதல் நடவடிக்கையாக இது இருக்கும் எனவும் மேலும் சுமார் 25 அமைச்சர்கள் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளதாக அந்த தகவல்கள் கூறின. இவர்கள் ராஜபக்ஷவினருக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்க இணங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதேவேளை மாத்தளையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசிய, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த அலுவிஹார,அரசாங்கத்தை சேர்ந்த 5 முக்கியஸ்தர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளதாக கூறியிருந்தார். ஐக்கிய தேசியக் கட்சியில் ஏற்பட்டு வரும் ஐக்கியம் காரணமாக இவர்கள் அரசாங்கத்தில் இருந்து விலக தீர்மானித்துள்ளனர். நாடாளுமன்றத்தில் இது சம்பந்தமாக விரிவாக கலந்துரையாடியதாகவும் அலுவிஹார குறிப்பிட்டிருந்தார். எனினும், அவர்களின் பெயர்களை அவர் வெளியிடவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக