18 பிப்ரவரி 2015

ஆயுதங்களைப் போட்டுவிட்டு சரணடையுங்கள் என கனிமொழி சொன்னார்-அனந்தி

கருணாநிதி-கனிமொழி
“ஆயுதங்களை போட்டுவிட்டு சரணடையுங்கள் உங்களை நாங்கள் பாதுகாப்போம் என்று கனிமொழி, அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி சார்பில் என் கணவரிடம் சொன்னார் ” என வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்திருக்கின்றார்.
தமிழகத்துக்கு அண்மையில் விஜயம் செய்திருந்த அனந்தி சசிதரன் ‘நியூஸ் 7 தமிழ்’ தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவு துணைப் பொறுப்பாளராகக் கடமையாற்றிய எழிலனின் மனைவியான அனந்தி இந்தப் பேட்டியில் முக்கிய விடயங்கள் பலவற்றை அம்பலப்படுத்தியிருக்கின்றார்.
“போர் மிகவும் மோசமாக நடைபெற்று இராணுவத்தின் குண்டுவீச்சுக்களால் பெருந்தொகையான மக்கள் குடும்பம் குடும்பமாக செத்துக்கொண்டிருந்தார்கள். அப்போது மே 16 ஆம் திகதி இரவு எனது கணவர் தொலைபேசியில் பேசினார். அவருடன் பேசியது கனிமொழி. முன்னாள் முதலமைச்சர் கருணாநதியின் மகள்.
நீங்கள் சரணடையுங்கள். உங்களைப் பாதுகாப்பதற்கு நாங்கள் எல்லாவற்றையும் செய்வோம். அது தொடர்பாக நாம் இப்போது பேசிக்கொண்டிருக்கின்றோம் என கனிமொழி தனது தந்தையின் சார்பில் சொன்னார். இவற்றை நம்பி சரணடைந்த நூற்றுக்கணக்கான போராளிகள் இன்று வரை எங்கே என்பது தெரியவில்லை” எனவும் அனந்தி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக