15 ஜூன் 2016

சோமவன்ச அமரசிங்க மரணமடைந்துள்ளார்!

மக்கள் விடுதலை முன்னணியின்(ஜேவிபி) முன்னாள் தலைவரும் மக்கள் சேவை கட்சியின் பொதுச் செயலாளருமான சோமவன்ஸ அமரசிங்க காலாமானார். இராஜகிரியவிலுள்ள தனது சகோதரரின் வீட்டில் அவர் நேற்று செவ்வாய்க்கிழமை காலமானார் என தெரிவிக்கப்படுகிறது. இறக்கும்போது அவருக்கு வயது 73. 1969ம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியில் இணைந்து கொண்ட சோமவன்ஸ அமரசிங்க, அக் கட்சியின் நான்காவது தலைவராக பதவியேற்றார். பின்னர், 2015ஆம் ஆண்டு அக் கட்சியில் இருந்து விலகி மக்கள் சேவை கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை நிறுவினார். மக்கள் விடுதலை முன்னணியின் நிறுவுநரான ரோஹன விஜயவீரவுக்கு பின்னர், அக்கட்சியின் தலைமை பீடத்தில் நீண்டகாலம் பதவி வகித்தவர் சோமவன்ஸ என்பது குறிப்பிடத்தக்கது.இறுதிக்காலங்களில் மகிந்த சார்பு கொள்கையை கடைப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.மரணம் தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியாகவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக