12 மார்ச் 2017

முன்னாள் அதிபர் சரோஜினி ஞானசோதியனின் அன்பான வேண்டுகோள்!

அன்பான மக்களே! இன்றய உலகில் மனித உயிர்களுக்கு பெறுமதி இல்லை என்ற ஒரு நிலை உருவாகிவிட்டதை நாளாந்தம் நடக்கும் விபத்துக்களில் இருந்து அறிகின்றோம் .காரணம் என்ன??ஒவ்வொரு வாகன ஓட்டிகளினதும் பொறுப்பற்ற செயல்களே !கூடுதலாக பலரிடமும் (லீசிங் ,)என்ற முறையில் அளவுக்கதிகமாக வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டு அரை குறை சாரதிப் பயிற்சியுடன் வாகனங்கள் ஓட்டிமற்றவர்களை தட்டுவதும் ,மதுப்பாவனை அதிகரித்து குடித்துவிட்டு ஒடுவதும் பண ஆசையில் நான் முந்தி நீமுந்திஎனப் போட்டி போட்டு ஓடுவதும் ,காப்பெற் வீதியில் வேகமாக ஓடலாம் என்ற பாணியில் இளைஞர்கள் ஓடுவதும் கூடி விட்டது .இவற்றைவிட டிப்பர் வாகனங்கள் கூடி அவற்றின் மூலமும் பலர் அடிபட்டு இறந்துள்ளனர் .அத்துடன் வீதிகளில் பொருட்களை ஏற்றி வரும் போது பழுதடைந்ததும் அப்படியே விட்டு விட்டு அதற்குப் பாதுகாப்பு விளக்குப் போடாமல் விட்டுச் சென்றதனால் ஏற்படும் விபத்துக்களும் தற்போது கூடியுள்ளது கடந்த 9-3-2017 அன்று என் அன்பு மாணவி விஜயரூபன் சர்மிளா மரணமாக வேண்டி வந்ததே டிராக்டர் ஒன்று நடு வீதியோரம் நிறுத்திவைத்திருந்தமையே அநியாய மரணம் அவரது மாமா ஒரு திறமையான சாரதி வேக்க்கட்டுப்பாட்டை மதிப்பவர் என்பதாலேயே மாமனுடன் அன்று ச்மிளா பயணித்தாள் அவளின் விதியா??இல்லை யாஎன்பது வேறு,உழவுயந்திரம் அப்படி நிறுத்தி வைக்காதிருந்தால் சர்மிளாவுக்கு இப்படி நடந்திருக்காது .தயவு செய்து வாகன ஓட்டிகளே மனித உயிர்களை பலியெடுக்காதீர்கள் .உங்கள் உயிர்களையும் மதியுங்கள் பிற உயிர்களையும் மதியுங்கள் நிதானம் பொறுமை கண்ணியம் என்பவற்றைக் கைக்கொள்ளுங்கள் சாரதிப் பணி சமூகப்பணி என எண்ணுங்கள் உங்கள் ஒருவர் கைகளிலேயே பல மனித உயிர்களின் காப்புறுதி உள்ளது "உயிர்களைக்காப்போம் விபத்துக்களைத் தவிர்ப்போம் ""எமது கோரிக்கையை பணிவோடு ஏற்றுக் கொள்ளுங்கள் .முகநூல் நண்பர்களே நீங்களும் ஒவ்வொருவரும் விழிப்பணர்வை உங்கள் மூலமாகவும் ஏற்படுத்துங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக