25 நவம்பர் 2017

முதல்வரை சந்தித்தார் கஜேந்திரகுமார்!

வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கும் இடையே நேற்றுக் காலை சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. வடக்கு மாகாண முதலமைச்சரின் இல்லத்தில் நேற்றுக் காலை 8.30 மணியளவில் ஆரம்பமான இந்தச் சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் இடம்பெற்றது.அதேவேளை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உடனான சந்திப்பின் போது, அரசின் தீர்வு மக்களுக்கு போதாமை தொடர்பாக கருத்திற்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து கலந்துரையாடப்பட்டதாக வடக்கு முதல்வர் சீ.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உடனான சந்திப்பு குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
“அரசியல் ரீதியாக சேர்ந்திருக்காவிட்டாலும், கொள்கை ரீதியாக சில விடயங்களில் ஆராய வேண்டிய நிலை மற்றும் தற்போதைய அரசின் தீர்வு மக்களுக்கு போதாது என்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. ஆனால், அரசியல் ரீதியாக எதுவும் கலந்துரையாடவில்லை. இருவரும் மக்கள் அமைப்பின் தலைவர் என்ற வகையில் கொள்கை ரீதியான ஒருமைப்பாடு தொடர்பாக கலந்துரையாடினோம்” என கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக