13 நவம்பர் 2014

கட்டளை பிறப்பித்தவர்களே தண்டிக்கப்படுவர்-அமெரிக்கா

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான கட்டளைகளை பிறப்பித்த நபர்களே தண்டிக்கப்படுவர் என அமெரிக்க நிபுணர் பெட்ரிக் ட்ரேனொர் தெரிவித்துள்ளார்.பெட்ரிக் அமெரிக்க நீதிமன்ற திணைக்களத்தின் விசேட விசாரனைப் பிரிவின் முன்னாள் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. நவீன கால யுத்தக் குற்றச் செயல் விசாரணைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட உத்தரவுகளை, கட்டளைகளை பிறப்பித்த நபர்களே தண்டிக்கப்படுவர் என அவர் தெரிவித்தள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், சர்வதேச நீதிமன்றங்கள், சர்வதேச ரீதியான விசாரணைக் குழுக்கள் போன்றன யுத்தக் குற்றச் செயல்களை தலைமை ஏற்று வழிநடத்தியவர்களுக்கு எதிராகவே விசாரணை நடத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற கடந்தகால, நிகழ்கால மற்றும் எதிர்கால யுத்தக் குற்றச் செயல் பதிவுகள் என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற கருத்தரங்கில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்த அனுமதி மறுக்கப்பட்டதுடன், சாட்சியாளர்களும் அடக்குமுறைக்கு உட்படுத்தப்படுவதாக சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.இவ்வாறான நிலைமைகளின் போது நாடுகளின் உயர் மட்ட அதிகாரிகளுக்கான கடமைகள், பொறுப்புக்கள் மற்றும் அதிகாரங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட முடியும் என அவர் தெரிவித்துள்ளார். உள்ளுர் ஊடகங்களின் தகவல்களின் தகவல்களை திரட்டி ஆராய்வதன் மூலம் நடவடிககை எடுக்கப்பட முடியும் என அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் நாட்டின் பொறுப்பு வாய்ந்த உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மீதே சர்வதேச சமூகம் சட்ட நவடிக்கை எடுக்கும் எனவும் முன்னரங்கில் கட்டகளை ஏற்று குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக