
காணி கையகப்படுத்தப்பட்டதாக காணி உரிமையாளர்களுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் கடிதம் அனுப்பபட்டுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காணி உரிமையாளர்களால் வேலணை பிரதேச செயலாளருக்கு மறுப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
கடற்படையினர் தொடர்ந்து தமது தோட்ட காணியினை கையகப்படுத்தி வைத்திருப்பதனால் தோட்டம் செய்ய முடியாது தாம் வாழ்வாதாரத்திற்கு வழியின்றி வறுமையில் வாடுவதாக காணி உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கடற்படையினரிடம் இருந்து தமது தோட்டகாணியினசம்பந்தப்பட்ட தரப்பினர் மீட்டு தந்து தமது வாழ்வாதாரத்திற்கு உதவுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக