23 மே 2015

மாணவியின் பிணத்தின் மீது அரசியல் லாபம் தேட முயன்ற மஹிந்த! அமைச்சர்கள் கண்டனம்.


புங்குடுதீவில் மிகக்கொடூரமான முறையில் படுகொலைசெய்யப்பட்ட மாணவியின் பிணத்தின் மீது அரசியல் லாபம் தேடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முற்பட்டுள்ளமையானது மிகவும் கேவலமானதொரு செயலாகும் என அரச அமைச்சர்கள்  கண்டனம் வெளியிட்டுள்ளனர்.  
மிகக்கொடூரமான முறையில் படுகொலைசெய்யப்பட்ட மாணவியின் பிணத்தின் மீது அரசியல் லாபம் தேடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முற்பட்டுள்ளமையானது மிகவும் கேவலமானதொரு செயலாகும் என அரச அமைச்சர்கள் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.அரச தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரூவான் விஜேவர்த்தன மற்றும் வெளிவிவகார பிரதி அமைச்சர் அஜித் பி.பெரேரா ஆகிய மூவரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் செயற்பாட்டை இனவாதத்தை தூண்டி மீண்டுமாக பதவியைப் பிடிப்பதற்கான வெட்கக்கேடான செயற்பாடெனவும் சுட்டிக்காட்டினர்.
இந்த ஈனத்தனமான செயற்பாட்டின் மூலமாக மஹிந்த ராஜபக்ஸ தனது மிலேச்சத்தனத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார் என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ தெரிவித்தார். தமது குடும்பத்தைச் சேர்ந்த பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியொருவருக்கு ஏற்பட்ட பேரவலத்தையடுத்து கோபங்கொண்ட மக்கள் இயல்பாக வெளிப்படுத்திய உணர்ச்சிவெளிப்பாடே யாழ்ப்பாணத்தில் நடைபெற்றன என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ குறிப்பிட்டிருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக