01 செப்டம்பர் 2015

கருணாவின் பேச்சால் படைகளுக்குள் குழப்பமாம்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாரகனின் மரணம் தொடர்பில் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்த கருத்து இலங்கை இராணுவ மட்டத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை பிரபாகரனின் சாவு குறித்து சட்ட ஆலோசனை நடத்த வேண்டும் என்று இராணுவப் பேச்சாளர் பிரிக்கேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளார்.
இலங்கை இராணுவத்தின் சண்டையில் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் யுத்த முடிவில் அறிவித்த நிலையில் பிரபாகரன் தனது கைத்துப்பாக்கியினால் தன்னைத்தானே சுட்டுக்கொன்றதாகவும் மனைவியும் மகளும் இராணுவத்தின் செல்வீச்சில் கொல்லப்பட்டதாகவும் கருணா கூறியுள்ளார்.
இறுதிப் போர் தொடர்பில் கருணா தெரிவித்த கருத்துக்களுக்கு பதில் அளிக்க முடியாது இராணுவப் பேச்சாளர் தடுமாறியுள்ளார். கருணாவின் பேச்சுக்கள் இராணுவ மட்டத்தில் பெரும் குழப்பத்தையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜெனிவா தொடர் நடைபெறவுள்ள வேளையில் பாதுகாப்பு தரப்பினருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் கருத்துக்களை அவர் வெளியிடலாம் என்ற சந்தேகம் இராணுவத்தினருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பிரபாரகன் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியதே கருணாதான் என்று தெரிவித்துள்ள இராணுவப் பேச்சாளர் அவர் தற்போது கூறும் கருத்து தொடர்பில் அதன் உண்மை நிலையை அறிய சட்ட ஆலோசனை நடத்துவதே சிறந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக