19 செப்டம்பர் 2015

தானும் இனவாத சிங்களவன்தான் என்பதை நிரூபிக்கிறார் விக்கிரமபாகு!

ஐ.நா சபை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி கலப்பு நீதிமன்றம் அமைக்கப்படுவது ஜனநாயகத்திற்காக போராடிய எம்மைப் போன்றவர்களை அவமானப்படுத்தும் செயல் என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்துள்ளார்.
2005ம் ஆண்டு தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்றிருந்தால் போர் தடுக்கப்பட்டிருக்கும். ஆனால் தமிழர்கள் வாக்களிக்காததால் தான் அவர் தோல்வி அடைந்தார். “ரணில் விக்கிரமசிங்க இனவாதியல்ல. அவர் விடுதலைப் புலிகளின் தலைவருடன் உடன்பாட்டில் கையெழுத்திட்டவர். கலப்பு நீதிமன்றத்தை நடைமுறைப்படுத்துமாறு அவரிடம் கோரும் உரிமை எவருக்கும் இல்லை.
கலப்பு நீதிமன்றம் என்ற பரிந்துரை, ஜனநாயகத்துக்காக போராடிய எம்மை, இலக்கு வைத்து அவமானப்படுத்தும் செயல்.இந்தக் கலப்பு நீதிமன்றம், சிலரால், ஜனவரி 8ஆம் திகதிக்கு முன்னர் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், முன்னைய காவல்துறை, நீதித்துறை தான் இலங்கையில் இன்னமும் இருக்கிறது என்று யாராலும் கூற முடியாது. ஜனவரி 8 ம் திகதி ஏற்பட்ட புரட்சி எல்லாவற்றையும் தூய்மைப்படுத்தியுள்ளது.
புதிய இடதுசாரி முன்னணி, தமிழர்களின் தன்னாட்சி உரிமைகளையும், வடக்கில் போரின் போது குற்றங்கள் இழைக்கப்பட்டது என்பதையும், ஏற்றுக் கொள்கிறது.லசந்த விக்கிரமதுங்க, பிரகீத் எக்னெலிகொட, தாஜுதீன் படுகொலைகளும் போர்க்குற்றங்களுக்குள் அடக்கப்பட வேண்டும். ஏனென்றால், ஆயுதப்படைகளினால், போர்க்காலத்தில் தான் இவை மேற்கொள்ளப்பட்டன.இவை குறித்து விசாரிக்க சிறிலங்கா தமது சொந்த நீதிமன்றத்தை உருவாக்க முடியும்.இந்தியாவைப் போன்று இந்தப் பிரச்சினையை ஒற்றையாட்சி அரசுக்குள் தீர்க்கப்பட முடியும். சமஸ்டி முறை இங்கு தேவையற்றது.தென்னாபிரிக்காவின் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவும் வெள்ளையின மக்களையும், குடும்பங்களையும் கொலை செய்திருக்கிறார் எனக் குறிப்பிட்டதுடன், எல்லா கெரில்லா தலைவர்களும், போராளிகளும், பெரும் எண்ணிக்கையான பொதுமக்களை கொன்றிருக்கிறார்கள்.விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் விடயத்தில் இது ஒன்றும் புதியதல்ல என்றார். புதிய இடதுசாரி முன்னணி வன்முறைகளைக் கண்டிக்கிறது.” எனவும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக