20 மார்ச் 2016

உலகத் தமிழர்களை காயப்படுத்திய வைகோவின் பேச்சு!

காலம் காலமாக தமிழர்களுக்கு துரோகம் இளைக்கும் படலம் தொடர்ந்த வண்ணமே இருக்கிறது,அந்த வழியிலே தன்னையும் வெளிக்காட்டி இருக்கின்றார் தமிழர்களால் மிகவும் நேசிக்கப்பட்ட,மரியாதைக்கு உரியவராக கருதப்பட்ட வைகோ அவர்கள்.தமிழீழப் போராட்டம் தனிலே தன்னையும் ஒரு போராளியாகக் காட்டிக்கொண்ட வைகோ அண்மையில் தமிழ் தேசியத்திற்கு எதிராக பேசியிருப்பது அவரின் வேடம் கலைந்து விட்டதையே காட்டுகிறது.தானும் ஒரு அற்ப அரசியல்வாதிதான் என்பதையே அவரின் பேச்சு நிலை நிறுத்தி நிற்கிறது.அவரின் இப்பேச்சுக் குறித்து தமிழ் உணர்வாளர்கள் என்று தம்மைக் கூறிக்கொள்பவர்கள் எத்தகைய கண்டனங்களையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்களின் உன்னத நோக்கங்களுக்காக போராடி வரும் சீமான் அவர்களின் கரங்களை பலப்படுத்த வேண்டியது உலகத் தமிழர்களின் தலையாய கடமையாகும் என்பதை நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக