09 ஆகஸ்ட் 2016

நான்காம் மாடியில் ஸ்பிறே அடித்து சித்திரவதை செய்தார்கள்!

கொழும்பிலுள்ள தீவிரவாத விசாரணைப்பிரிவுத் தலைமையகமான 4ஆம் மாடிக்கு விசாரணைக்குச் சென்று வந்த பின்னர் வெயிலில் நிற்கவும், கடினமான வேலைகள் செய்யவும் முடிவதில்லை என முன்னாள் போராளியொருவர் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், கொழும்பு 4ஆம் மாடியில் எங்களை விசாரணை செய்யும் போது, எங்களுக்கு வலி ஸ்பிறே ஒன்று அடித்து விசாரணை செய்தனர். சீனத் தயாரிப்பான அந்த ஸ்பிறே அடித்தால், வலிகள் தெரியாது. அதன்பிறகு எங்களை சித்திரவதை செய்வார்கள்.சித்திரவதை செய்யும் நேரத்தில் அதனை உணர்ந்து கொள்ள முடியாது. ஆனால், சில மணி நேரங்கள் கழிய வலி தொடங்கினால், அதனைத் தாங்க முடியாது. இவ்வாறு செய்த சித்திரவதைகளால் இன்று கடினமான வேலை செய்ய முடிவதில்லை. வெயிலில் அதிக நேரம் நின்றால், தலைவலி ஏற்பட்டு மயக்கம் வருகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக