28 மே 2017

சட்டவாளர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி காலமானார்



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான அப்பாத்துரை வினாயகமூர்த்தி இன்று பிற்பகல் 1 மணியளவில் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 84 ஆகும்.  அப்பாத்துரை வினாயகமூர்த்தி, அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தலைவராகவும் முன்னர் செயற்பட்டிருந்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான அப்பாத்துரை வினாயகமூர்த்தி இன்று பிற்பகல் 1 மணியளவில் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 84 ஆகும். அப்பாத்துரை வினாயகமூர்த்தி, அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தலைவராகவும் முன்னர் செயற்பட்டிருந்தார்.2000ஆம் ஆண்டு, 2001ஆம் ஆண்டு, 2010 ஆம் ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் யாழ். மாவட்டத்தில் போட்டியிட்டுத் தெரிவு செய்யப்பட்டவர். அப்பாத்துரை வினாயகமூர்த்தியின் இறுதிச் சடங்கு யாழ்.கொக்குவிலில் அமைந்துள்ள அவரது வீட்டில் செவ்வாய்க்கிழமை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மனித உரிமை செயற்பாட்டாளரான அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்கள் நூற்றுக்கணக்கான மனித உரிமை மீறல் வழக்குகளுக்காக ஆயராகி வாதாடி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.அவரின் இழப்பானது தமிழ் மக்களுக்கு மிகப்பெரும் பேரிழப்பாகும்.அன்னாருக்கு புளியங்கூடல்.கொம் குழுமம் தனது அகவணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக