15 ஜூன் 2017

விக்னேஸ்வரன் மீது சூழ்ச்சி அரங்கேறுகிறது!

பன்னாட்டு சக்திகளின் சதியினால் தமிழ் மக்களுக்கான உரிமைகளை வென்றெடுக்கும் போராட்டம் முள்ளிவாய்க்காலில் குருதி தோய்ந்த காவியமாய் முடிவுரை எழுதப்பட்டு மக்கள் நிர்க்கதியாக நின்றவேளை தமிழ்மக்களின் உரிமைகளுக்காய் குரல்கொடுக்கவென தமிழ்மக்களின் கொள்கைகளுடன் ஒத்துப்போகின்ற ஒரு தனிப்பெருந் தலைமையாக தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரே வடக்கின் முதல்வர் சி.வி விக்கினேஸ்வரன்.
அரசு மக்களின் காணிவிவகாரம் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் இழுத்தடிப்பான ஓர் போக்கினைக் கடைப்பிடித்து வந்தபோது அரசிற்கு அழுத்தங்களைக் கொடுத்துவந்த ஒரேயொரு மக்கள் பிரதிநிதி விக்கினேஸ்வரன் அவர்களே!
மக்களின் கொள்கைகளை மனதில் நிறுத்தி அரசியல் பாதையில் மக்களின் உரிமைகளை ஒவ்வொன்றாக மீட்டெடுப்பதில் முழுமூச்சாகச் செயற்பட்ட இவரை, தென்பகுதி அடுத்த பிரபாகரன் என்றே வர்ணித்தது. சிறுபான்மையினரை அடிமைப்படுத்துவதில் பெருந்தடையாக இருந்த இவரை எவ்வழியில் வீழ்த்தலாம் என்பதில் எந்நேரமும் குறியாக இருந்த அரசு கடந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின்போது நாட்டில் புலிகளை மீளவும் உருவாக்க முனைகின்றார் எனும் ஓர் குற்றச்சாட்டை இவர்மீது முன்வைத்து பௌத்த மதகுருக்களைத் தூண்டிவிட்டது. அதுவும் பயனற்றுப்போனது.
அடுத்தகட்டமாக விலைபோன சில தமிழ்த் தலைமைகளை வைத்து அரசு தனது நாடகத்தினை அரங்கேற்றி வலுவாக இருந்த தமிழரசுக்கட்சியிடையே ஓர் பிளவினை ஏற்படுத்தி அதனை வலுக்குன்றச் செய்துள்ளது.இதனால் மீண்டும் மக்கள் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர்.
அரசிற்கு சிம்மசொப்பனமாக இருந்த வடக்கு மாகாணசபையில் இடம்பெற்ற ஊழலை எதிர்த்து அவ் ஊழல்ப் பேர்வழிகளை பதவிநீக்கம் செய்தமைக்காக இன்று ஓர் உன்னதமான, அரசியலில் அத்தனை தந்திரோபாயங்களையும் அறிந்து அதன்படி தமிழ்மக்களுக்கான அரசியல்த் தீர்வுக்கான ஒவ்வொரு அடியையும் நிதானமாக எடுத்துவைத்த முதல்வரை அரசு விலைபோன சில தமிழ்த் தலைமைகளை வைத்து பதவியிலிருந்து நீக்கியுள்ளது. இங்குதான் மக்கள் விழிப்படையவேண்டிய கட்டாயமுள்ளது. இப்படியோர் தமிழின மீட்பரை அரசு திட்டமிட்டு சதியால் வீழ்த்தியதைக் கண்டும் மௌனம் காத்து மறுபடியும் அரசின் அடக்குமுறைக்குள் சிக்குண்டு நாதியற்று வாழ்வதா, இல்லை முதல்வரின் பின்னின்று நீதிக்காகக் குரல்கொடுத்து உரிமைகளை வென்றெடுத்து சுதந்திரமாக வாழ்வதா என்பதை முடிவுசெய்து புதிய வரலாற்றினை மக்கள் எழுத வேண்டுமென தமிழ்த்தாய் கண்விழிக்கின்றாள்.

தமிழ் இளைஞர்ளே!!!

முள்ளிவாய்க்காலில் தமிழனின் விடிவுக்காக பொராடியவர்களை துரோகம் எப்படி தோற்கடித்ததோ அதேபோல இன்று மற்றுமொரு துரோகம் நடந்து கொண்டிருக்க நாம் அனைவரும் வீடுகளில் படுத்துறங்கிங்கொண்டிருக்கிறோம். நாளை விடிந்ததும் எமக்காக பாடுபட்ட இன்னொரு மரமும் துரோகிகளால் வெட்டி சாய்க்கப்பட்டிருக்கும் வேதனையோடு கடந்து செல்லப்போகிறோமா? முடிவெடுங்கள் இளைஞர்கள் முடிவெடுத்தால் இயலாது என்று ஒண்றில்லை.
வடக்கில் உள்ள எல்லா மாகாணசபை உறுப்பினர்களின் வீடுகளுக்கு முன்னால் ஒண்று கூடுங்கள் அவர்களை துரோகத்திற்கு துணைபோகவேிடாது தடுத்து நிறுத்துங்கள் உடனடியாக செயற்படுங்கள் இல்லையேல் நாளை ஒரு மாபெரும் துரோகத்தினை கண்டுகளித்த பார்வையாளராகிவிடுவீர்கள்..

-வடமாகாண இளைஞர் பேரவை-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக