15 மார்ச் 2015

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தோரைக் கொன்ற உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும்! - மன்னார் ஆயர்.

இறுதிக்கட்டப் போரில் வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த புலித்தேவன், நடேசன் உள்ளிட்டவர்களைச் மஹிந்த அரசு சுட்டுக் கொன்ற உண்மையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என மன்னார் மறைமாவட்ட அதிவணக்கத்திற்குரிய ஆயர் இராயப்பு ஜோசப் கேட்டுக் கொண்டுள்ளார்.
இலங்கையின் ‘நோ பயர் சோன்’ (யுத்த சூனிய வலயம்) என்ற பெயரில் சனல் 4 தொலைக்காட்சியினால் வெளியிடப்பட்ட ஆவணப்படம் தொடர்பிலும், அதற்கு இலங்கையில் தடைவிதிக்கப்படலாம் என்று பரவலான செய்திகள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், நடந்த உண்மைகளை ஏற்றுக் கொண்டாலேயே நல்லிணக்கம் உருவாகும். உண்மைகளை ஏற்றுக்கொள்ள மறுப்பது நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது. என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக