25 டிசம்பர் 2016

தொடரும் போராளிகளின் திடீர் மரணம்!


வவுனியா- புளியங்குளத்தில் ஏ-9, வீதியில் பஸ்ஸூக்காக காத்து நின்ற முன்னாள் போராளி ஒருவர்,நேற்று திடீரென மயங்கி வீழ்ந்து மரணமானார். மயங்கி வீழ்ந்ததையடுத்து சக பயணிகளால் மீட்கப்பட்டு, புளியங்குளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சை வவுனியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது, இவர் இடை வழியில் உயிரிழந்தார்.
வவுனியா- புளியங்குளத்தில் ஏ9 வீதியில் பயணிகள் ஊர்திக்காக காத்திருந்த போராளி ஒருவர்,நேற்று திடீரென மயங்கி வீழ்ந்து மரணமானார் என தெரிவிக்கப்படுகிறது.மயங்கி வீழ்ந்ததையடுத்து சக பயணிகளால் மீட்கப்பட்டு புளியங்குளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது இவர் வழியில் உயிரிழந்தார் என மேலும் தெரியவருகிறது.நெடுங்கேணி குழவிசுட்டான் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஆசீர்வாதம் ஸ்ரிபன் (வயது 36) என்பவரே உயிரிழந்தவராவார். நேற்றுமாலை இவர் யாழ்ப்பாணத்திலிருக்கும் தனது உறவினரின் வீட்டிற்கு செல்வதற்கு புளியங்குளம் சந்தியில் உள்ள பயணிகள் ஊர்தி தரிப்பிடத்தில் காத்திருந்த போதே மயங்கி விழுந்துள்ளார்.உடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக, வவுனியா வைத்தியசாலைச் செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை நெடுங்கேணி மற்றும் புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக