25 ஜூலை 2013

பின்வாங்கிய முஸ்லிம் காங்கிரஸ்!

13வது திருத்தச்சட்டத்தைப் பலவீனப்படுத்தும் திருத்தங்களை மேற்கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் தீர்மானம் ஒன்றை, கிழக்கு மாகாணசபையில் சமர்ப்பித்த சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், கடைசி நேரத்தில் பின்வாங்கியுள்ளது.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சமர்ப்பித்திருந்த தீர்மானம் கிழக்கு மாகாணசபையில் நேற்று விவாதிக்கப்படவிருந்த நிலையிலேயே, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதனை மீளப்பெற்றுக் கொண்டுள்ளது.
இதனால், இந்தத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்கக் காத்திருந்த, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் 11 பேர் உள்ளிட்ட 13 எதிரணி உறுப்பினர்களும் ஏமாற்றத்துடன் சபையில் இருந்து வெளியேறினர்.
இதுகுறித்து கருத்து வெளியிட்ட குழுக்களின் தலைவர் ஏ.எம். ஜமீல், இந்த தீர்மானம் குறித்து விவாதம் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டிருந்த போதிலும், தற்போது அதனை முன்னெடுப்பதில்லை என்று கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.
சிறிலங்கா அரசாங்கம் 13வது திருத்தச்சட்டத்தை திருத்தும் முடிவை பிற்போட்டுள்ளதால், பொருத்தமான நேரத்தில் இந்த தீர்மானம் கொண்டு வரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக