26 ஜூலை 2013

சிறுவனின் மரணத்திற்கு அவுஸ்திரேலிய பிரதமர் இரங்கல்!

படகு விபத்தில் உயிரிழந்த புகலிடக் கோரிக்கைச் சிறுவனின் தந்தைக்கு கெவின் ரொட் இரங்கல்
கெவின்  ரூட்
அண்மையில் இந்தோனேஷிய கடற்பரப்பில் இடம்பெற்ற படகு விபத்தில் உயிரிழந்த இலங்கைப் புகலிடக் கோரிக்கைச் சிறுவனின் தந்தைக்கு, அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ரொட் இரங்கல் தெரிவித்துள்ளார். மூன்று வயதான பர்மிதன் பாலமனாறன் என்ற சிறுவனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இந்த படகில் 150க்கும் மேற்பட்டவர்கள் பயணித்துள்ளதாகவும், படகு விபத்தில் 13க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சிறுவனின் தந்தைக்கு பிரதமர் ரொட், தொலைபேசி மூலம் தனது இரங்கலை வெளியிட்டுள்ளார். பர்மிதனின் தந்தையான நாகராசா கடந்த சில ஆண்டுகளாக அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மனைவியும் பிள்ளையும் குடு;ம்ப வீசா கிடைக்காத காரணத்தினால் இலங்கையில் தங்கியிருந்தனர். நாகராசா பேர்த்தில் உள்ள தொழிச்சாலையொன்றில் பணியாற்றுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக