19 ஜூலை 2016

ஜெர்மனியில் பயணிகள் மீது தாக்குதல் நடத்தியவர் சுட்டுக்கொலை!

ஜெர்மனியின் தென்புற நகரான வூர்ஸ்பர்கில் தொடரூந்து ஒன்றில் பல பயணிகளைத் தாக்கிய 17 வயது ஆப்கானிஸ்தான் குடியேறி ஒருவரை ஜெர்மானியப் போலிசார் சுட்டுக்கொன்றுள்ளனர்.இந்தக் குடியேறி கையில் ஒரு கோடாரி மற்றும் ஒரு கத்தியால் பயணிகளைத் தாக்கியதாகவும், அவரால் தாக்கப்பட்டவர்களில் நால்வர் மிக மோசமான நிலையில் இருப்பதாகவும் தெரிகிறது.
பவேரியா மாகாண உள்துறை அமைச்சர் ஜோயாச்சிம் ஹெர்மன் இந்த தாக்குதலுக்கான உள்நோக்கம் என்னவென்று இது வரை தெரியவில்லை என்றார்.
பிரான்ஸில் நடந்ததைப் போல இஸ்லாமியவாதிகளின் தாக்குதல்கள் ஜெர்மனியிலும் நடக்கலாம் என்று கணிசமானவர்கள் அஞ்சுவதாக  ஜெர்மனியில் உள்ள பிபிசி செய்தியாளர் குறிப்பிட்டுள்ளதாக "பிபிசி தமிழ்" செய்தி வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக